Posts

Showing posts from September, 2018

வையத்து வாழ்வீர்காள்...27

வளம் இருந்தும் இதயம் இல்லாதோர்: விதுரர் கூறுகிறார்-> அளவிட முடியாத செல்வம் இருந்த பொழுதும் அவற்றை தான் மட்டுமே அனுபவிப்பவன், நன்கு உண்டு மகிழ்பவன், நன்கு உடுத்தி மகிழ்பவன் இதயமற்ற மனிதனாகிறான் (திரு அல்லிக்கேணி ஸ்ரீ ருக்மணி சமேத வேங்கடகிருஷ்ணன் திருவடி சரணம். திருமங்கை ஆழ்வார் திருவடி சரணம்)

வையத்து வாழ்வீர்காள்...26

இப்படியாக பண்டிதர்கள் மற்றும் மூடர்களின் குணங்களை பேசும் விதுரர் வளத்தினை பற்றி பேசத் துவங்குகிறார். வளம் விளையும் விதம் விதுரர் கூறுகிறார் -> வளம் என்பது நல்ல மங்களகரமான செயல்களினால் விளைவது. அப்படி விளையும் வளம் தொடர்ந்து செய்வதால் வளருகிறது. தொடர்ந்து ஒரு செயல் செய்யப் படும் பொழுது திறன் வளருகிறது. அத்தகைய திறன்களால் வளம் வேர் விடுகிறது. பிறகு நல்ல நிர்வாகத்தின் மூலமாக நிலை பெறுகிறது. (திரு அல்லிக்கேணி ஸ்ரீ ருக்மணி சமேத வேங்கடகிருஷ்ணன் திருவடி சரணம். திருமங்கை ஆழ்வார் திருவடி சரணம்)